மூச்சுத் திணறல் (wheezing)


                    இயற்கை வைத்தியம்
                                      மூச்சுத் திணறல் (wheezing)

மூச்சுத் திணறல் (wizeeing) இன்று பலருக்கும் இப்பிரச்சனை உண்டு அவர்கள் இன்ஹெலர் இல்லாமல் வெளியே முடியவில்லை. தண்ணீர் இல்லாத மீன் போல் இன்ஹெலர் இல்லை என்றால் அவர்கள் துடிக்க இயற்கை வைத்திய முறையில் சில நல்ல தீர்வுகள் இருக்கின்றன.
துடிப்பது
தொடங்கிவிடுகிறார்கள்இதற்கு

பூண்டு

பூண்டு ஆஸ்துமா வீசிங் போன்ற பல்வேறு வகையான நோய்களின் சிகிச்சைக்கு பயன்படும் பூண்டு, இருமல் போன்ற பக்டீரியா தொற்றையும் தடுக்க உதவுகிறது. தொற்று பாதிப்புகள் மூச்சு குழாயில் சளி உற்பத்தி மற்றும் சளி படிவதற்கு காரணமாக உள்ளது. இதுவே வீசிங்கின் மூலக்காரணம் ஆகும். ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு பூண்டுகளை சாப்பிடுவதன் மூலம் கடுமையான ஆஸ்துமாவைக் கூட தடுக்கலாம். பூண்டு மாத்திரைகளும் கடைகளில் கிடைக்கின்றன. ஆனால் அவை இயற்கை பூண்டை விட சக்தி வாய்ந்ததாக இருக்காது.


கண்டந்திப்பிலி மிளகு சுக்கு


இந்த மூன்றையும் இரும்பு அல்லது மண் சட்டியில் போட்டு வறுத்து எடுத்துக்க வேண்டும். ரொம்ப கருப்பா வரக்கூடாது நிதானமா வறுத்து எடுக்கவேண்டும். மண் சட்டி இரும்பு சட்டி இதை தவிர்த்து வேறு எதையும் பயன்படுத்த வேண்டாம். சுக்கைப் பொடி செய்ய இயலவில்லை என்றால் நாட்டு மருந்து கடையில் சுக்குப்பொடி தனியாகவே கிடைக்கும். இம்மூன்றையும் ஒன்றாக சேர்த்து ஒரு கலவையாக தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு எப்போதெல்லாம் மூச்சுத்திணறல் வீசிங் வருவது போன்று தோன்றுகிறது இந்த உணர முடிகிறதோ அப்போது இதை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து நன்கு மென்று அதில் வரும் உமிழ்நீரை விழுங்க வேண்டும். அதன்பின் வெதுவெதுப்பான நீரை பருக வேண்டும். இதனால் சளி யும் முற்றிலும் குணமடையும். இதை செய்து வர உங்களுக்கு ஏற்படும் மூச்சுத்திணறல் படிப்படியாக குறையும். நீங்கள் வெளியும் செல்லும் நேரத்தில் கூட இதை ஒரு கையில் எடுத்துச் செல்லலாம்.

கற்பூரம்

கற்பூரம் மற்றும் கடுகு கடுகு எண்ணெய், மூக்கில் சளி சேருவதை குறைக்க உதவுகிறது. இதனால் சுவாச மண்டலம் சீராக செயலாற்றுகிறது. ஆஸ்துமா நோயாளிகளுக்கு இந்த தன்மையால் ஒரு சிறந்த நிவாரணம் கிடைக்கிறது. கடுகு எண்ணெயுடன் கற்பூரத்தை சேர்த்து பயன்படுத்துவதால் இதன் பலன் மேலும் அதிகரிக்கிறது. கடுகு எண்ணெய்யை சிறிதளவு எடுத்து சூடாக்கி, ஒரு ஜாடியில் வைத்துக் கொள்ளவும். இதனை நுகர்வதால் உங்களுக்கு ஆஸ்துமாவில் இருந்து நிவாரணம் கிடைக்கலாம்.

மஞ்சள்

மஞ்சள், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்சிஜெனேற்ற எதிர்ப்பு பண்புகளைக் கொண்டது என்பதை அனைவரும் அறிவோம். கூடுதலாக, மஞ்சள் வீசிங் பாதிப்புக்கு ஒரு சிறந்த சிகிச்சையையும் அளிக்கிறது. ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அரை ஸ்பூன் அரைத்த மஞ்சள் தூளை சேர்த்து கலந்து தினமும் காலையில் குடிக்க வேண்டும். இதனை தொடர்ந்து செய்வதால், வீசிங் குறைகிறது. இதனை குடிப்பதால் உண்டாகும் அறிகுறிகள் நோயாளிகளுக்கு நன்மையைத் தருவதாக அறியப்படுகிறது. ஆஸ்துமா பாதிப்பும் கட்டுக்குள் இருப்பதாக கூறப்படுகிறது.




மமுசுமுசுக்கைக் கீரை சாறில் திப்பிலியை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி மூன்று சிட்டிகை அளவு பொடியைத் தேனில் குழைத்து ஒரு வெற்றிலை வைத்து சாப்பிட்டால் மூச்சுத் திணறல் குறையும்.






தூதுவளைக் கீரையுடன் மிளகு சுக்கு திப்பிலி தாளிசபத்திரி ஆகியவற்றைச் சேர்த்து கஷாயமாக்கி வடிகட்டி தேன் கலந்து சாப்பிட்டால் மூச்சுத்திணறல் ஆஸ்துமா குளிர்க்காய்ச்சல் போன்றவற்றைப் குறையும்சிங்கால் .

குழந்தைகளோ பெரியவர்களோ அவதிப்பட்டால், அவர்களுக்கு கற்பூரவல்லி, கரிசலாங்கண்ணி, துளசி ஆகியவைக் கலந்து கஷாயம் செய்து தேன் அல்லது கருப்பட்டி கலந்து கொடுக்கலாம்

தவிர்க்க வேண்டியவை


பால் தயிர் முட்டை மீன் இதை தவிர்க்க வேண்டும்.
நண்டு கடலை பருப்பு மற்றும் பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்.
நெல்லிக் காய் கத்தரிக்காய் எலுமிச்சை பழம் திராட்சை பழம் தவிர்க்க வேண்டும்.
கோக் பெப்சி மிராண்டா போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
தக்காளி கொய்யா கத்திரிக்கா டால்டா இதையும் தவிர்க்க வேண்டும்.
வயிறு முட்டும் அளவுக்கு உணவு உண்ணக்கூடாது.
வளர்ப்பு பிராணிகள் இருந்து விலகி இருக்க வேண்டும்.
அதிகமாக மாசு இருக்கும் இடத்திலிருந்து தூசி இருக்கும் இடத்திலிருந்து சற்று விலகியே இருக்க வேண்டும்.

இயற்கை வைத்தியம் மூச்சுத்திணறலுக்கு வீட்டில் இருக்கும் தே கை வைத்தியம் .







எங்கள் YouTube channelக்கு subscribe like share பண்ணுங்க

                                

                                முந்தைய பதிவுக்குச் செல்ல    
                                அடுத்த பதிவிற்கு செல்ல

                                              இயற்கை வைத்தியம்









Comments

Popular posts from this blog

நீரிழிவு நோய் (diabetes)

இதயத்தை காக்கும் செம்பருத்தி

நீர் குடிக்கும் முறை